மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலையில் இதனை தடுப்பதற்காக காலி மது பாட்டில்களை மதுக்கடைகளில் திரும்பப்பெறும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. நீலகிரி மாவட்டம் அதிகமாக சுற்றுலா பயணிகள் கூடும் இடமாக இருப்பதால் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் ஒவ்வொரு காலி பாட்டிலுக்கும் பத்து ரூபாய் திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிறகு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல் செய்யப்படுவது ஏன் என்பதற்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். அதாவது மது அருந்துவோர் காலி பாட்டில்களை விவசாய நிலம், சாலைகளில் வீசுவதை தவிர்க்கவே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. வைப்புத் தொகையாக பெறப்படும் பத்து ரூபாயை காலி பாட்டிலை திரும்ப கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
