Connect with us

பருத்திவீரன் படத்தின் வெற்றியால் நொந்துப்போன செவ்வாழை சரவணன்! அப்படி என்னதான் நடந்திருக்கும்?

CINEMA

பருத்திவீரன் படத்தின் வெற்றியால் நொந்துப்போன செவ்வாழை சரவணன்! அப்படி என்னதான் நடந்திருக்கும்?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்தவர் சரவணன். “பொண்டாட்டி ராஜ்ஜியம்”, “மாமியார் வீடு”, “தாய் மனசு” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சரவணன் ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து “பருத்திவீரன்” திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது. இந்த நிலையில் சரவணனிடம் ஒரு பேட்டியில், “பருத்திவீரன் படத்தில் கிடைத்த பெயரை நீங்கள் தக்கவைத்துக்கொண்டீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டாராம்.

   

அதற்கு பதிலளித்த சரவணன், “இல்லை, அந்த படத்திற்குப் பிறகு பல இயக்குனர்கள் என்னை பருத்திவீரன் செவ்வாழை கதாபாத்திரம் போன்றே பெரிய மீசையோடு நடிக்க சொன்னார்கள். மீண்டும் மீண்டும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இதன் காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை இழக்க வேண்டியதாக ஆயிற்று” என்று சரவணன் பதிலளித்தாராம்.

 

“பருத்திவீரன்” திரைப்படத்தில் சரவணன் ஏற்று நடித்த செவ்வாழை என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. மேலும் அந்த கதாபாத்திரம் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாகவும் ஆனது. ஆனால் “பருத்திவீரன்” திரைப்படத்திற்குப் பிறகு சரவணன் நடித்த எந்த கதாபாத்திரமும் ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் சோகம்.

Continue Reading
To Top