Connect with us

CINEMA

”உன்ன உருவாக்குனதே அமீர் தான்.. அவர இப்படியா அசிங்கப்படுத்துவ”.. ‘பருத்திவீரன்’ விவகாரத்தில் கொந்தளித்த பாரதிராஜா..

16 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அமீர் – ஞானவேல் ராஜா, ‘பருத்தி வீரன்’ பட சர்ச்சை விவகாரம் தற்பொழுது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் பொண்வண்ணன்,  நடிகர் சினேகன் என இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வரும் இந்த வேளையில் தற்பொழுது இயக்குனர் பாரதிராஜாவும் தனது ஆதரவினை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

   

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ‘வணக்கம். திரு.  ஞானவேல் அவர்களே! உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சனை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும் படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு .அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்து விட வேண்டாம் .பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி, அதில் ஒன்றை தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காலமாக கூறி வன்வமாக சிரிப்பது, என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டே தான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து பிரச்சனையை சுமுகமாக பேசித் தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். அன்புடன் பாரதிராஜா” என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top