திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவுக்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என்று அன்புமணி கூறியது சிரிப்பாக உள்ளது. கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு நாங்கள் கொண்டு வருவோம். திமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர் அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். மதவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் துணை போகின்றன. தமிழகத்தில் பாஜக கட்சி இந்த அளவுக்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக வில் போய்விடும். அதிமுகவினர் பாஜக கட்சியின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…