ஸ்டாலினுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த திருமா… “ஆட்சியில் பங்கு, உரிய நேரத்தில் முடிவு”… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவுக்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என்று அன்புமணி கூறியது சிரிப்பாக உள்ளது. கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு நாங்கள் கொண்டு வருவோம். திமுக கூட்டணியில் பாமக இணையும் என்ற யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர் அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். மதவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் துணை போகின்றன. தமிழகத்தில் பாஜக கட்சி இந்த அளவுக்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக வில் போய்விடும். அதிமுகவினர் பாஜக கட்சியின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.