இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பார்த்திபன். இவர் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். முதன் முதலாக கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தை இயக்கி அதில் பார்த்திபனே நடித்தார். இந்த படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதன் பிறகு பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சைக் குதிரை, ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்தார்.

பார்த்திபனின் ஹவுஸ்புல் திரைப்படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. கிறுக்கல்கள் என்ற கவிதை தொகுப்பையும் பார்த்திபன் எழுதியுள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். பாரதி கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக பார்த்திபனுக்கு சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியதாவது, மகாராஜா படத்தில் இடைவெளி வரைக்கும் கதை எதை நோக்கி போகுதுன்னு சொல்லவே இல்ல. இதே மாதிரி ஒரு கதையை 24 வருஷத்துக்கு முன்னாடி ரஜினி சார் கிட்ட நான் சொன்னேன். நீங்க உங்க கண்ணை அசைக்கிறதுல இருந்து தெரியும் நீங்க அவனை பழிவாங்க போறீங்க அப்படின்னு. ஆனா எதுக்கு பழிவாங்க போறீங்க அப்படிங்கறது நான் சொல்லல. ரஜினி சார் இன்டர்வெல் வரைக்கும் சொல்லாம இருந்தா ஆடியன்ஸ்க்கு எப்படி தெரியும் என ரஜினி சார் கேட்டாரு.

தேவையில்லை சார் நீங்க பழிவாங்க போறீங்க அப்படிங்கறது நம்ம சுவாரசியமா சொன்னா போதும் அப்படின்னு சொன்னேன். ஆனா ஒரு சில காரணத்தால அந்த கதையை எடுக்க முடியாமல் போயிடுச்சு. ரஜினி சாரை பொருத்த வரைக்கும் அவர் இவ்வளவு உயரத்தில் இருக்கிறதுக்கு அவர் தேர்ந்தெடுக்கிறார் கதைகள் ரொம்ப முக்கியம். ஒரு சில படங்கள் தோல்வி அடைந்து இருக்கலாம். அதுக்கு ரஜினி சார் இயக்குனர்கள் மேல வைக்கிற நம்பிக்கைதான் காரணம் என ஓப்பனாக பேசியுள்ளார்.

