Categories: சினிமா

மாலை போட்டு சரக்கடித்து போலிஸிடம் மாட்டிய செந்தில்… அப்ப அவர் சொன்ன அந்த வார்த்தை.. சிரிப்பை அடக்கமுடியாமல் பகிர்ந்த பார்த்திபன்!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம். கவுண்டமணிக்குக் கொடுப்பதில் பாதிபோதும் எனக்கு என சொல்லி வாங்கிக் கொள்வாராம் செந்தில். ஆனால் சம்பாதித்த பணத்தை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இன்று பெரும் பணக்காரராக வாழ்ந்து வருகிறாராம்.

இந்நிலையில் செந்தில் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை பார்த்திபன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் “தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ரோட்டில்தான் அவர்கள் எல்லாம் ஒரு குழுவாக தங்கியிருந்தனர். அப்போது மதுவிலக்கு இருந்த காலம் என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் திருட்டுத்தனமான மது வாங்கிக் குடித்துள்ளனர். அப்போது செந்தில் மாலை போட்டிருந்தார். ஆனாலும் கழட்டி வைத்துவிட்டு குடித்திருக்கிறார்.

அப்போது போலீஸ் வர, இவர்கள் எல்லாம் பயந்து ஓடியுள்ளனர். எல்லோரும் வேகமாக ஓட செந்தில் மட்டும் பொறுமையாக ஓடியுள்ளார். அவரிடம் ஒருத்தர் ‘டேய் வேகமா வாடா’ என சொல்ல, அதற்கு செந்தில் “அண்ண கிளாஸ்ல இருக்குற சரக்கு தளும்பி கீழ ஊத்திடும்ணே” என சொல்லியுள்ளார். ஏன் சொல்கிறேன் என்றால் சினிமாவில் அவரிடம் வெளிப்படும் வெகுளித்தனம் அவரது உண்மையான இயல்பு என சொல்லதான்” என இந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago