பொதுவாக திருமணத்தின்போது பெண் பிள்ளைகளுக்கு பணம், தங்கம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால் வியட்நாமை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு அவருடைய பெற்றோர் இந்த சீதனத்தோடு சேர்த்து 100 வகை பூனை குட்டிகளை வரதட்சணையாக கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனை குட்டிகளின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேலிருக்கும். இந்த பூனை குட்டிகள் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கோபிக் லுவாக் காபி கொட்டைகளை சாப்பிட்டு அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றும்.
அந்த கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவை விலையுயர்ந்த காபி கொட்டையாகும். இந்த காபி கொட்டை தொழிலை தங்களுடைய மகள் தொடங்க உதவுவதற்காக இந்த பூனைகளை வரதட்சணையாக அந்த பெற்றோர் அளித்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். பூனை குட்டிகளோடு மண மக்களுக்கு 25 தங்க கட்டி, 17 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நிறுவன பங்கு, ஏழு நிலங்கள், விலை உயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…