“அரசு மருத்துவமனையின் உச்சக்கட்ட அலட்சியம்.. 12 வயது மகனை ஸ்டிரெச்சரில் வைத்து சாலையில் இழுத்துச் சென்ற பெற்றோர்.. கண் கலங்க வைக்கும் பின்னணி”..!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில், முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக 12 வயது சிறுவன் ஆதர்ஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அருகில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், சிறுவனைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் கிடைக்காததால், பெற்றோர் வேறு வழியின்றி தங்கள் மகனை ஒரு ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து தள்ளிக்கொண்டே மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.

மருத்துவ ஊழியர்கள் யாரும் உடன் வராத நிலையில், சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சிறுவனின் தந்தை ஸ்டிரெச்சரைச் சாலையில் இழுத்துச் சென்றார். பின்னால் வந்த தாய், வெயிலின் தாக்கத்திலிருந்து தன் மகனைப் பாதுகாக்கத் தனது சேலையின் நுனியைத் தண்ணீரில் நனைத்துச் சிறுவனின் முகத்தில் போர்த்தியபடி கண்ணீருடன் நடந்து வந்தார். ஆனால், உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சிறுவனைச் சோதித்துவிட்டு, மீண்டும் எம்.ஒய். மருத்துவமனைக்கே கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த முறையும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அந்த பெற்றோர் மீண்டும் மகனை ஸ்டிரெச்சரிலேயே வைத்து எம்.ஒய். மருத்துவமனைக்கு இழுத்துச் சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது.

நெஞ்சை உலுக்கும் இந்த அவல நிலை குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஒய். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

“புது குழந்தை பெத்துட்டு உன்னை தூக்கி எறிவேன்…” கணவரை பழிவாங்க 3 வயது மகனை சித்திரவதை செய்த தாய்…. இணையத்தில் தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ….!!

ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…

5 minutes ago

என்னை விட்டுடுங்க… காப்பாத்துங்க ப்ளீஸ்… கிழிந்த உடையில் அலறிய பெண்… காசியாபாத்தை நடுங்கவைத்த திகில் சம்பவம்…!!

காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…

9 minutes ago

கடவுளே… இப்படி ஒரு கொடூரமா?… ஆஸ்திரேலியாவில் போர்ஷே கார் மோதி விபத்து… நொடிப் பொழுதில் பறிபோன இரு பெண்களின் உயிர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…

18 minutes ago

“Wi-Fi கனெக்ஷன் கொடுக்க வந்த இடத்தில் இப்படியா…? பெண்களையும் விட்டு வைக்கல…. தடியால் அடித்து கொண்டதில் 8 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து…

23 minutes ago

அம்மா… இரண்டே இரண்டு நிமிடம் பேசுங்களேன்… திரும்பிப் பார்க்காத பெற்றோர்… மகன் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…

36 minutes ago