#image_title
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
நாடக உலகில் இருந்து வந்ததால் எம் ஜி ஆருக்கு சினிமாத்துறையின் பல பிரிவுகளிலும் அறிவு இருந்தது. அவரே சில படங்களை இயக்கி தன்னை வெற்றிகரமான இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். அதே போல பாடல்களுக்கான ட்யூன்களை வாங்குவதிலும் பாடல் வரிகளை அதற்கேற்ப வாங்குவதிலும் எம் ஜி ஆருக்கு அபாரமான அறிவு இருந்ததாக அவரோடு பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.
அதனால்தான் அவர் படத்தில் பாடல்கள் அவரது இமேஜை உயர்த்தப் பலவகைகளில் பயன்பட்டன. அவருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் மற்றும் வாலி போன்றவர்கள் முத்து முத்தான பாடல்களை எழுதியுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் கண்ணதாசனோடு அரசியல் ரீதியாக எம் ஜி ஆருக்கு கருத்து வேறுபாடு வந்து பிரிந்தார். இதனால் எம் ஜி ஆர் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன் என்று கண்ணதாசன் பிடிவாதமாக இருந்துள்ளார்.
அப்போதுதான் 1965 ஆம் ஆண்டு உருவான கலங்கரை விளக்கம் என்ற படத்துக்கு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலத்தை எழுத வைக்கலாம் என எம் ஜி ஆர் சொல்லியுள்ளார். ஆனால் தன் சித்தப்பாவான கண்ணதாசனுக்கும் எம் ஜி ஆருக்கும் பிரச்சனை இருக்கும் போது எப்படி நாம் அவர் படத்துக்கு பாடல் எழுதுவது என அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டாராம் பஞ்சு அருணாசலம்.
இதையறிந்த கண்ணதாசன் பஞ்சு அருணாசலத்திடம்” ஏன்டா எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான பிரச்சனை அதுல உனக்கு என்ன? அவர் படத்துக்கு பாடல் எழுதுவது எவ்வளவு நல்ல வாய்ப்பு தெரியுமா? நல்ல பேரு கிடைக்கும் போய் எழுதிட்டு வா” என சொல்லி அனுப்பியுள்ளார். அப்படி பஞ்சு எழுதிய பாடல்கள்தான் என்னை மறந்ததேன் மற்றும் பொன்னொழில் பூத்தது ஆகிய பாடல்கள்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…