#image_title
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
நாடக உலகில் இருந்து வந்ததால் எம் ஜி ஆருக்கு சினிமாத்துறையின் பல பிரிவுகளிலும் அறிவு இருந்தது. அவரே சில படங்களை இயக்கி தன்னை வெற்றிகரமான இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். அதே போல பாடல்களுக்கான ட்யூன்களை வாங்குவதிலும் பாடல் வரிகளை அதற்கேற்ப வாங்குவதிலும் எம் ஜி ஆருக்கு அபாரமான அறிவு இருந்ததாக அவரோடு பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.
அதனால்தான் அவர் படத்தில் பாடல்கள் அவரது இமேஜை உயர்த்தப் பலவகைகளில் பயன்பட்டன. அவருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் மற்றும் வாலி போன்றவர்கள் முத்து முத்தான பாடல்களை எழுதியுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் கண்ணதாசனோடு அரசியல் ரீதியாக எம் ஜி ஆருக்கு கருத்து வேறுபாடு வந்து பிரிந்தார். இதனால் எம் ஜி ஆர் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன் என்று கண்ணதாசன் பிடிவாதமாக இருந்துள்ளார்.
அப்போதுதான் 1965 ஆம் ஆண்டு உருவான கலங்கரை விளக்கம் என்ற படத்துக்கு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலத்தை எழுத வைக்கலாம் என எம் ஜி ஆர் சொல்லியுள்ளார். ஆனால் தன் சித்தப்பாவான கண்ணதாசனுக்கும் எம் ஜி ஆருக்கும் பிரச்சனை இருக்கும் போது எப்படி நாம் அவர் படத்துக்கு பாடல் எழுதுவது என அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டாராம் பஞ்சு அருணாசலம்.
இதையறிந்த கண்ணதாசன் பஞ்சு அருணாசலத்திடம்” ஏன்டா எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான பிரச்சனை அதுல உனக்கு என்ன? அவர் படத்துக்கு பாடல் எழுதுவது எவ்வளவு நல்ல வாய்ப்பு தெரியுமா? நல்ல பேரு கிடைக்கும் போய் எழுதிட்டு வா” என சொல்லி அனுப்பியுள்ளார். அப்படி பஞ்சு எழுதிய பாடல்கள்தான் என்னை மறந்ததேன் மற்றும் பொன்னொழில் பூத்தது ஆகிய பாடல்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…