#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் சீசன் அன்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் இறுதியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை லாவண்யா. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பிறகு காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அவரும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகியதால் சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாவண்யா திருப்பூரை சேர்ந்தவர். மாடலின் மூலமாக மீடியாவிற்குள் நுழைந்தார். தற்போது இவர் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் லாவண்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்து கூறியுள்ளார். அதில், நான் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது நான் செய்த அனைத்து விஷயங்களும் என்னுடைய காதலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும். எனது வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக என்னுடைய காதல் தடையாக இருந்ததால் நான் பிரேக் அப் செய்து விட்டேன் என லாவண்யா வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…