காதலனை பிரிந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை.. பிரேக் அப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?.. அவரே சொன்ன ஷாக் நியூஸ்..!!

By Nanthini

Published on:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் சீசன் அன்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் இறுதியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை லாவண்யா. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   

அதன்பிறகு காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அவரும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகியதால் சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாவண்யா திருப்பூரை சேர்ந்தவர். மாடலின் மூலமாக மீடியாவிற்குள் நுழைந்தார். தற்போது இவர் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் லாவண்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்து கூறியுள்ளார். அதில், நான் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது நான் செய்த அனைத்து விஷயங்களும் என்னுடைய காதலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும். எனது வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக என்னுடைய காதல் தடையாக இருந்ததால் நான் பிரேக் அப் செய்து விட்டேன் என லாவண்யா வெளிப்படையாக கூறியுள்ளார்.

author avatar
Nanthini