பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை கோரி முறைப்படி மனுத் தாக்கல் செய்தால் அதை விசாரிக்கத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது. பழநி மலை அடிவாரத்தில் உள்ள 1.40 ஏக்கர் மடத்து நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், பொறுப்பு பதிவாளரின் செயல்பாடு, சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆழமாக ஆராய சிபிஐ விசாரணையே உகந்தது என வழக்கறிஞர் மாரிஸ் குமார், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பாக முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உரிய மனுவாகத் தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
ஏற்கெனவே இந்தச் சட்டவிரோதப் பத்திரப்பதிவு தொடர்பாகச் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, கோயில் இணை ஆணையரின் புகாரின் பேரில் போலிப் பதிவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. தற்போது இவழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தற்போதைய அறிவிப்பு வழக்கின் போக்கில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, விரைவில் சிபிஐ விசாரணை கோரும் புதிய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…