தங்கலான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டுவம். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா மற்றும் கலையரசன் போன்ற திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பா ரஞ்சித் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது. இப்படியான நிலையில் படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினத்தில் நடந்து கொண்டிருந்தபோது சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட சமயத்தில் ஸ்டன்ட் கலைஞர் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து படப்பிடிப்புக்கு அனுமதி பெறாத நாளில் படப்பிடிப்பு நடத்தியதாக குற்றம் சாட்டி 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நாகப்பட்டினம் அருகே உள்ள பகுதியில் ஜூலை 13ஆம் தேதி அனுமதி பெறாமல் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்த போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சென்ட் மாஸ்டர் மோகன்ராஜ் காரில் இருந்து தாவி செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இப்படியான நிலையில் படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்துக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி இருந்தார். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…