சமீப காலமாகவே நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள் ,பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரியவிட்டாலோ அல்லது அழைத்து சென்றாலும் உரிமையாளர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உரிமம் மற்றும் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
