Categories: சினிமா

A V M-க்கே டிமிக்கி காட்டிய நடிகை பானுமதி.. சொன்னதை சாதிச்சுட்டாரே..

Spread the love

இந்திய சினிமாவின் பல்கலைக்கழமாக ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கியது ஏ.வி.எம் ஸ்டூடியோ. பல்வேறு மொழித் திரைப்படங்கள் தினசரி இங்கு ஷூட்டிங் செய்யப்பட்டு பல ஹிட் படங்களைக் கொடுத்த சினிமாவின் சொர்க்க பூமி. மேலும் ஏ.வி.எம் நிறுவனமும் பல ஹிட் படங்களை தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது. இப்படிப்பட்ட ஏ.வி.எம் .ஸ்டியோ நிறுவனர் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரையே நடிகை ஒருவர் இரண்டு மாதமாக உள்ளே நுழைய விடாமல் செய்திருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமல்ல பழம்பெரும் நடிகை பானுமதி தான்.

ஏ.வி.எம் தயாரித்த அன்னை படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க பானுமதியை மாற்றாக வேறு யாரும் இல்லைஎன்ற நிலையில் பானுமதியோ, பழைய மனக்கசப்புகளால் ஏவிம் தயாரிப்பு படங்களில் நடிப்பதில்லை என்ற மனநிலையிலிருந்தார். ஆனால் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும், பானுமதிதான் இப்படத்தில் நடித்தாக வேண்டுமென்று கூறி, அவரை ஒப்பந்தம் செய்ய தனது மகன்களை அனுப்பினார்.

#image_title

மக்கள் திலகத்துக்கே நடிப்புக்கு தடை போட்ட முக்கியப் புள்ளி.. ப்ளாஷ் நியூஸ்-ஆல் அப்போது பதறிய தமிழகம்..

ஆனால் பானுமதி முதலில் மறுத்தாலும், தன் கதாபாத்திரம் பிடித்ததாலும், தயாரிப்பு தரப்பினரின் நேர்த்தியான அணுகுமுறையாலும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனாலும், ஏவிஎம் ஸ்டுடியோவில் வந்து தான் நடிக்கமாட்டேனென்றும், வேறு ஸ்டுடியோ அல்லது வெளிப்புற இடங்களில் படம்பிடித்தால் நடிப்பதாகவும் கூறினார். அது சாத்தியமற்றதென்று ஏ.வி.எம். தங்கள் நிலையைக் கூற, பானுமதியோ, அப்படியானால், தான் ஏவிஎம் ஸ்டுடியோ வந்தே படம் நடிப்பதாகவும், தான் நடிக்கும் காட்சிகள் படமாகி முடிவடையும் காலம் வரை, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஸ்டுடியோவிற்குள்ளேயே வரக்கூடாதென்றும் நிபந்தனை விதித்தார்.

Voice of Bhavatharani : ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ முதல் ‘மேஹரசைலா’ பாடல் வரை.. நம் மனதில் நீங்கா இடம்பிடத்த பவதாரணியின் பாடல்கள்..

ஒரு கனம் அதிர்ந்து போன தயாரிப்பு தரப்பினர், அங்கிருந்து வெளியேறி நடந்ததை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கூற, அவரோ சாதாரணமாக இதைக் கருதி, பானுமதி நடித்தால் போதுமென்றும், தான் அதுவரை ஸ்டுடியோவிற்கு வராமல், வீட்டிலிருந்தபடியே இதர படவேலைகளைக் கவனிப்பதாகவும் கூலாக கூறினார். அதன்பின் அன்னை படம் சிறப்பாக உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்த இருமாதங்களும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஸ்டுடியோ பக்கமே வரவில்லையாம். படம் வெளியாகி அமோக வெற்றிபெற்றது.

#image_title

இறுதியாக பட வெற்றி விழாவின்போது, பானுமதி தன் செயலுக்கு வருந்தி, ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் கால்களில் பணிந்து வணங்கினார். ரசிகர்கள், அதை மரியாதையின் அடையாளமாகவே கருதினர். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தினருக்கே அதன் உண்மை நிலவரம் தெரிந்திருந்தது.

admin

Recent Posts

கணிப்புகளை தவிடுபொடியாக்கி “100 தொகுதிகளில் விஜய் முன்னிலை”… மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆளுங்கட்சி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும்…

23 seconds ago

BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…

12 minutes ago

BIG BREAKING: சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்திக்கும் ஸ்டாலின்.. 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாஸ் முன்னிலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…

16 minutes ago

திமுக 49, அதிமுக 41.. ஆனால் தவெக 65… வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே அதிர வைக்கும் தவெக…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…

22 minutes ago

BREAKING: வில்லிவாக்கத்தில் ‘ஆதவ் அர்ஜுனா’ அதிரடி! தவெக முன்னிலையால் திணறும் திமுக, அதிமுக..!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…

25 minutes ago

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

40 minutes ago