தமிழக ஆட்சியில் தகுதியும் அனுபவமும் மிக்க அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, கட்சிக்கு நெருக்கமானவர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அரசுத் துறை சார்ந்த முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கும் போக்கு அதிகரித்து வருவது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயும் ‘தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்பு குழு’வின் தலைவராக விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ‘குரு தலைவா’ நியமிக்கப்பட்டிருப்பது, அரசின் நடுநிலைமை மற்றும் நிர்வாகத் திறன் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மக்கள் பணத்தில் இயங்கும் அரசு அமைப்புகளின் பொறுப்புகளுக்கு, உரிய கல்வித் தகுதியும் தொழில்முறை அனுபவமும் கொண்ட வல்லுநர்களை நியமிக்காமல், அரசியல் விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிப்பது அதிகார வர்க்கத்தின் மனஉறுதியைக் குலைப்பதோடு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டையும் சீர்குலைக்கும் பேராபத்தைக் கொண்டுள்ளது.
