உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கைது நடவடிக்கைக்குப் பிறகு அவரைச் சிறையில் அடைப்பதே ஆரம்பக்கட்டத் திட்டமாக இருந்ததாகவும், ஆனால் அவர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும் மாநிலம் முழுவதிலும் திமுகவினர் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, இக்கட்டான இந்தச் சூழலில் அவரைச் சிறையில் அடைத்தால் அதுவே அவருக்குப் பெருமளவிலான அனுதாப அலையை உருவாக்கி, ஒரு பலமிக்க தலைவராக உருவெடுக்க வழிவகுத்துவிடும் எனத் தவெக தலைமை அஞ்சியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய அரசியல் பின்னடைவுகளைத் தவிர்க்கும் பொருட்டே, அவரைச் சிறையிலடைக்கும் திட்டத்திலிருந்து தவெக தலைமை சட்டெனப் பின்வாங்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
