கொலை முயற்சி வழக்கை முடிக்க 2 லட்சம் டீல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்… போலீஸுக்கே தண்ணி காட்டிய போலி டிரைவர்… ஹரியானாவில் சிக்கிய பலே திருடன்…!!!

Spread the love

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், நீதிபதியின் ஓட்டுநர் என்று பொய் கூறி சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தூகா கிராமத்தைச் சேர்ந்த இக்பால் என்பவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இம்ரான் என்ற நபர், தான் ஃபரிதாபாத் அமர்வு நீதிபதியின் ஓட்டுநர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். வழக்கிலிருந்து கடுமையான பிரிவுகளை நீக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இக்பாலிடம் அவர் நம்பிக்கையைத் தூண்டியுள்ளார்.

வழக்கில் உள்ள 307-வது பிரிவை (கொலை முயற்சி) ரத்து செய்யவும், குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு கட்டணம் என்ற பெயரில் 1,80,000 ரூபாயை இம்ரான் பெற்றுள்ளார். ஆனால், பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இக்பால் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, இம்ரான் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தப் பணப் பரிமாற்றத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட நியாஸ் முகமது என்பவர், ஒரு பகுதியை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதித் தொகையைத் தராமல் ஏமாற்றப் பார்த்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இக்பால் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இம்ரான் ஒரு போலி நபர் என்பதும், அரசுப் பணியில் இருப்பதாகக் கூறி மோசடி செய்ததும் உறுதியானது. இதனையடுத்து நூஹ் சதர் காவல்துறையினர் இம்ரானைக் கைது செய்தனர். இந்த மோசடிச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

29 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

39 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

51 minutes ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

1 மணத்தியாலம் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

1 மணத்தியாலம் ago