“லஞ்சம் கொடுத்தேன்”…. அமைச்சர் மரிய வில்சனுக்கு விழுந்த திடீர் சிடுக்கு…. MLA சான்றிதழைப் பறிக்க ECI-க்கு வழக்கறிஞர் நோட்டீஸ்….!

Spread the love

அமைச்சர் மரிய வில்சன் தான் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது சட்டப்பேரவை உறுப்பினர் சான்றிதழை தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெனீபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையும் (DVAC) இந்தியத் தேர்தல் ஆணையமும் (ECI) இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நேரடி இடமில்லாததால் இச்சம்பவத்தின் அடிப்படையில் அவரது அமைச்சர் பதவியை உடனடியாகப் பறிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊழலை வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி தொடர்ந்து பதவியில் நீடிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது எம்.எல்.ஏ. சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

6 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

6 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago