‘முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை’… ஒற்றை காலில் நின்று கொண்டு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் தன்னம்பிக்கை மனிதர்… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பல வீடியோக்கள் திடீரென்று வெளியாகி வைரலாகி வருகிறது. வாழ்க்கை என்பது சிலருக்கு போராட்டமாகவும், சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி, போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவையில்லை.

   

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காண முடியும். ‘யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கையில்’ என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

அப்படி தற்பொழுது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக வைரலாக்கப்பட்டு வருகிறது .அந்த வீடியோவில் ஒரு நபர் தனது ஒற்றைக்காலில் நின்று கொண்டு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்.

தற்பொழுது அவரின் தன்னம்பிக்கையை பாராட்டி பலரும் இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு சான்றாக தற்பொழுதும் இவரை போல பலர் உலகில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோ….