பாமகவின் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும், அக்கட்சியின் முக்கிய முகமாகவும் விளங்கிய ‘லயன்’ கே.எஸ்.கோபால், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தவெகவின் முக்கிய நிர்வாகியான வி.எஸ்.பாபு முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக ஐக்கியமானார். வடசென்னை பகுதியில் பாமகவின் வலுவான தூணாகப் பார்க்கப்பட்ட கே.எஸ்.கோபாலின் இந்த திடீர் இடமாற்றம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டு வருகிறது. தவெகவின் ஆட்சிப் பொறுப்புக்கு பிறகு, மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் தவெகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் பாமகவின் முக்கிய நிர்வாகி தவெகவில் இணைந்திருப்பது, வடசென்னை பகுதியில் தவெகவின் பலத்தை மேலும் அதிகரிப்பதுடன், பிற கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…