சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் அறந்தாங்கி நிஷா. வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு உணவுப்பொருட்களை தனது காரில் கொண்டு சென்று கொடுத்தார். அதோடு மட்டுமின்றி பல்வேறு உதவிகளையும் செய்தார்.
இவர் சென்னை மக்களுக்காக தனது சொந்த மகள் மகள் ஸபா டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ICU- வில் இருந்த போது கூட அம்மாவிடம் விட்டு விட்டு மழை வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு உதவி செய்தார். தற்பொழுது இவர் , வெள்ளத்தில் தங்களது புத்தகங்கள் , school bag போன்றவற்றை இழந்த குழந்தைகளுக்கு நல்ல அறிவுரை வழங்கி உதவுவதாகவும் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த செயலை மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் டி ராஜேந்தர். சினிமாவில் வெற்றி காண்பது என்பது மிகப்பெரிய விஷயம்.…
ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில்…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.…