அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, நேற்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களைக் கூண்டோடு நீக்கிய இபிஎஸ், இன்று அதன் தொடர்ச்சியாக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர். கமலக்கண்ணனை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது தனது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வரும் சூழலில், அடுத்தடுத்து வரும் இந்த நீக்க அறிவிப்புகள் கட்சிக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; மேலும் பல விக்கெட்டுகள் வீழும் என எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக தொண்டர்களிடையே ஒருவித பதற்றமும், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
