கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன் விளை கேசவன்சேரி பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பி உள்ளார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் இருவரும் தங்களுடைய உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றபடி இருந்தனர்.
இதனிடையே திருமணமான 18 வது நாள் அதாவது கடந்த நவம்பர் 21ஆம் தேதி அன்று மாலையில் கணவர் வீட்டில் இருந்த புதுமணப்பெண் திடீரென்று மாயமானார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என தெரிகிறது. அந்த சமயத்தில் வெளியே சென்று இருந்த இளைஞரின் தாயார் வீடு திரும்பிய போது வீட்டிலிருந்த மருமகளை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்து மகனுக்கு தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறி உடனடியாக வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாலிபர் தனது மனைவியை செல்போனில் அழைத்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் உடனே வீடு திரும்பியதும் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து பல இடங்களில் மனைவியை தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் வீட்டுக்குள் மீண்டும் சோதனை செய்தபோது தாலி செயின் மட்டும் இருந்துள்ளது. இதனால் தாலிச் செயினை கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு அவர் சென்றிருக்கலாம் என்று நினைத்தனர். அப்போது இளைஞரின் செல்போனுக்கு whatsapp மூலமாக அவருடைய மனைவி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை தனது பெற்றோர் செய்து வைத்து விட்டார்கள்.
உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேட வேண்டாம், நான் திரும்பி வர மாட்டேன். தாலியை கூட வேண்டாம் என்று தான் கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்களுடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை ப்ளீஸ் என்று வாய்ஸ் மெசேஜ்யில் பேசி இருந்தார். இதனைக் கேட்டு இளம்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…