மதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைத் தனது பதவியிலிருந்து விலகச் சொல்லி தமிழக முதல்வர் விஜய் வற்புறுத்தியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது, தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக தமிழக வெற்றிக் கழக அரசிற்கும் பெரும் தலைவலியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
வைகோவின் இந்த அதிரடிப் பேட்டியை மிக முக்கிய ஆதாரமாகக் கையில் எடுத்துக்கொண்டு, ஆளுநரிடம் முறைப்படி புகார் மனு ஒன்றை அளிக்க பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே அமமுக சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கியதாகத் தொடுக்கப்பட்ட ஒரு புகார் மனு ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும் சூழலில், தற்போது எழுந்துள்ள இந்த புதிய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால், தற்போதைய TVK அரசே கவிழும் அளவிற்கு மிக மோசமான அரசியல் மற்றும் சட்ட ரீதியான ஆபத்துகள் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…