“விஜய் அரசுக்கு வந்த ஆகப்பெரிய ஆபத்து”.. ஆட்சியை கவிழ்க்க ஆளுநரிடம் ஓடும் அதிமுக.. வைகோ கொடுத்த மரண அஸ்திரம்….!

By Nanthini on ஆனி 30, 2026

Spread the love

மதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைத் தனது பதவியிலிருந்து விலகச் சொல்லி தமிழக முதல்வர் விஜய் வற்புறுத்தியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது, தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக தமிழக வெற்றிக் கழக அரசிற்கும் பெரும் தலைவலியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

வைகோவின் இந்த அதிரடிப் பேட்டியை மிக முக்கிய ஆதாரமாகக் கையில் எடுத்துக்கொண்டு, ஆளுநரிடம் முறைப்படி புகார் மனு ஒன்றை அளிக்க பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே அமமுக சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கியதாகத் தொடுக்கப்பட்ட ஒரு புகார் மனு ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும் சூழலில், தற்போது எழுந்துள்ள இந்த புதிய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால், தற்போதைய TVK அரசே கவிழும் அளவிற்கு மிக மோசமான அரசியல் மற்றும் சட்ட ரீதியான ஆபத்துகள் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.