அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளை சேர்ந்த திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச் – 1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா திட்டத்தில் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் திறமையானவர்களை மட்டும் பணிக்கு எடுப்பதில்லை. குறைந்த ஊதியத்தில் பணிபுரிய தயாராக இருப்பவர்களையும் தேர்வு செய்கிறது. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு வெளிநாட்டவர்களால் பறிக்கப்படுகிறது என்று கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விசா தொடர்பான புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எச்-1பி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களுடன் அழைத்துச் செல்லும் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கான எச் 4 விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளை மறைத்து வைக்க கூடாது. தனி உரிமை அமைப்பில் சென்று அவற்றை பொதுக் கணக்காக மாற்ற வேண்டும். அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் டிசம்பர் 15 முதல் ஆய்வு செய்யப்படும். அமெரிக்க விசா என்பது உரிமை இல்லை. அது ஒரு சலுகை. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண ஆய்வில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் பயன்படுத்துவோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…
காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து…
மாதவிடாய் காலத்தில் தனது மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல், காற்று புகாத குறுகிய அறை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, பாத்திரங்கள்…
கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…