வேலைக்கு நடுவே விபரீத விளையாட்டு விளையாடிய 26 வயது இளம்பெண்… 2 வயது குழந்தையை தவிக்க விட்டு… மாமியார் வீட்டில் கண்ட அதிர்ச்சி…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் பலரும் தங்கள் வாழ்க்கையை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பண இழப்பு மற்றும் அதனால் உருவாகும் மன அழுத்தம் தொடர்பாக சமூகத்தில் மீண்டும் கவலையை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த மேன் ஓட்டுநர் பிரகாஷ் என்பவருடைய மனைவி பொன் ஆனந்தி (26). இவர் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகி தொடர்ந்து விளையாடி வந்ததால் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் மன வேதனைக்கு உள்ளான ஆனந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கணவர் கோவையில் வேலை பார்த்து வர ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். குழந்தை பாவு சத்திரத்தில் அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தது. சம்பவத்தன்று காலை மாமியார் செல்வி வீட்டுக்கு சென்ற போது கதவு திறக்கப்படாததால் வேறு ஒரு சாவியை பயன்படுத்தி உள்ளே சென்றார். அப்போது உள்ளே ஆனந்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தி அறையில் இருந்து ஒரு கடிதத்தை மீட்டனர். அந்தக் கடிதத்தில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்தேன் என்று எழுதப்பட்டிருந்தது. 63 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். திருமணம் ஆகி 3 1/2 வருடங்களை ஆகும் நிலையில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago