தனியார் துறை ஊழியர்கள் சில முக்கிய விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். குறிப்பாக EPFO கணக்கு தொடர்பாக அனைத்து ஊழியர்களும் அறிய வேண்டிய சில முக்கிய விதிகள் உள்ளது. ஊழியர்களின் நலனுக்காக சமீபத்தில் EPFO செய்துள்ள ஒரு மிகப்பெரிய மாற்றம் குறித்து பலரும் அறியாமல் உள்ளனர். அதாவது பணியாளர்கள் வைப்பு நிதி அமைப்பு விரைவில் அதன் புதிய தளமான EPFO 3.0ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும் வசதி, பிஎஃப் கணக்கை UPI உடன் இணைப்பது, எளிதான கிளைம் உட்பட பல புதிய அம்சங்கள் இதில் இருக்கும். மேலும் அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் பி எப் பென்ஷன் தாரர்களின் குறைந்தபட்ச பென்ஷன் 1500 முதல் 2000 ரூபாயாக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
