காலையிலேயே ஷாக்… தவெக கட்சி அங்கீகாரம் ரத்து?…. தொடரும் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்நிலையில் விஜய்யின் பிரச்சார கூட்டத்தின் போது விதிக்கப்பட்ட நிபதனைகளை பின்பற்றவில்லை என்பதால் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மேலும் பல மனுக்கள் தாக்கல் ஆகும் என்று கூறப்படும் நிலையில் கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.