எங்க இருந்தாலும் என் பொண்டாட்டி நல்லா இருக்கட்டும்.. மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்துவிட்டு கண்ணீரோடு சென்ற கணவர்..!

Spread the love

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் வனிதா (29). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜகத் குரு (32) என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனிதா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து இரண்டு மகன்கள் உடன் பழஞ்சநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்துள்ளார்.

அப்போது வனிதாவுக்கும் நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கொத்தனாரான பிரபாகரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் ஜெயத் குரு தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு வனிதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் வனிதா பிரபாகரனுடன் வசித்து வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வனிதா தனது காதலன் பிரபாகரனுடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஜகத்குரு தன் மனைவி யாருடன் வாழ பிடிக்கிறதோ அவருடனே மகிழ்ச்சியாக வாழட்டும் என்று வாழ்த்தி விட்டு அவரை பிரபாகரனுடன் அனுப்பி வைத்தார். பிறகு தன் இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு ஜகத்குரு கண்ணீர் மல்க சொந்த ஊருக்கு புறப்பட்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்தது.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

3 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

3 மணத்தியாலங்கள் ago