பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் நேற்று புற்றுநோயின் காரணமாக காலமானார். கடந்த ஆறு காலம் ஆறு மாதமாக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நோயின் தாக்கம் கல்லீரலையும் பாதித்திருக்கும் என்பதால் சில நாட்களாக ஐசுவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக அவருடைய மகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அகால மரணம் அடைந்தா.ர் இவருடைய மகள்கள் இருவரும் சீரியலில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகள் அபிநயா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். இளைய மகள் அஞ்சனா திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மனைவிதான் சீரியல் நடிகை தீபா. சன் டிவியில் மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார் . இவர் 17 வயதிலேயே சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்து அதன் பிறகு ஜெயா டிவியில் ஒளிபரப்பான அலைபாயுதே சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நேத்ரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு மீண்டும் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையின் கேரக்டரில் கவின் நடித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு அம்மாவாக நடித்தவர் தான் இவர். அது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களிலும் நடித்தார். தொடர்ந்து சின்ன திரையில் மாமியார் கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் . சிங்க பெண்ணே சீரியல் தான் முதன் முதலில் இவரை நெகட்டிவ் ரோலில் காட்டியுள்ளது. சீரியல்கள் மட்டுமில்லாமல் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றிருக்கிறார் தீபா நேத்ரன்.
