தமிழ் சினிமாவுக்கு முதல் முதலாக மிமிக்ரியை அறிமுகப்படுத்தியது தெரியுமா?… பலரும் அறியாத சுவார்ஸ்ய தகவல்!

By vinoth on மார்கழி 4, 2024

Spread the love

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.

ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட  அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

   

ரஜினி, கமல் போன்றோருக்கான மாஸ் ஆடியன்ஸ்கள் இருப்பது போலவே டி ஆருக்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அவருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவரின் அந்த காலத்து கதைகள் பல இப்போது சீரியல்களாக எடுக்கப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன.

   

 

இவரின் முதல் படமான ஒரு தலை ராகம் பல வகையிலும் தமிழ் சினிமாவில் ட்ரண்ட் செட்டிங் படம் என்றால் அது மிகையாகாது. இந்த படம் தமிழ் சினிமாவுக்கு பல திறமையானக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. அப்படி ஒரு திறமையான கலைஞர்தான் தியாகு. இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்த தியாகு ஒரு காட்சியில் வகுப்பறையில் கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் பேதுவது போல பேசி மிமிக்ரி செய்து சக மாணவர்களை சிரிக்க வைப்பார். அதுதான் தமிழ் சினிமாவிலேயே முதல் முதல் செய்யப்பட்ட மிமிக்ரி காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அந்த வகைக் காமெடியைப் பல நடிகர்களும் மேற்கொண்டனர். ஆனால் அதை முதல் முதலில் தொடங்கி வைத்தவர் தியாகுதான்.