வடக்கு நேபாளத்தில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு, அப்பகுதியை நிலைகுலையச் செய்துள்ளது. குறுகிய நேரத்திற்குள் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆற்றின் கரைகளில் ஒதுங்கும் உடல்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திடீர் இயற்கை பேரிடரில் நேபாளத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். காணாமல் போன 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் 300 பேர் இந்தியர்கள் என்றும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 40 பேரும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது. மாயமானவர்களை விரைந்து கண்டறியவும் மீட்புப் பணிகளை வேகப்படுத்தவும் மீட்புக் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கிற்கான முதன்மைச் சாத்தியக்கூறாக லெண்டே ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு சுட்டிக்காட்டப்படுகிறது. பனிச்சரிவு காரணமாக போதே கோசி ஆற்றின் நீர் ஓட்டம் தற்காலிகமாகத் தடைபட்டு, பின்னர் ஒரே நேரத்தில் அணைக்கட்டு உடைந்ததைப் போல் சீறிப் பாய்ந்ததே இந்த பேரழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பனி அல்லது பாறைச் சரிவைத் தூண்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதேபோல பனிப்பாறை ஏரி உடைந்ததால் (GLOF) நீர் பெருகியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் வெள்ளத்தின் உண்மையான மூலகாரணத்தைக் கண்டறியும் முயற்சியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ள நிலையில், முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…