கவினை நம்பி நடுத்தெருவுக்கு வந்த நெல்சன்… 5 கோடி நாசமா போச்சி… வேட்டை மன்னன் எடுத்த அதிரடி முடிவு…!

By Soundarya on கார்த்திகை 14, 2024

Spread the love

தீபாவளிக்கு அமரன் , பிரதர் மற்றும் பிளடிபக்கர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் அமரன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றளவும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அமரன் 13-வது நாளில் 260 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தவிர மற்ற இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. கவின் நடித்த பிளடி பெக்கர் படத்தின் தமிழர் உரிமை 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றி வெளியிட்டார்.

#image_title

11 கோடி உரிமையை செந்தில் கைப்பற்றி நியோகம் செய்துள்ளார். இதனால் 5 ஸ்டார் செந்திலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தொகை திரும்ப அளிக்க தேவையில்லை என்ற முறையில் தான் வியாபாரம் நடந்துள்ளது . ஆனால் இந்த படத்திலிருந்து பைவ் ஸ்டார் செந்திலுக்கு நான்கு கோடி மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதால் சுமார் 7 கோடி வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

   
   

 

இந்நிலையில் இதை கேள்விப்பட்ட நெல்சன் படம் வெளியான சில நாட்களில் நஷ்ட தொகையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று 5 ஸ்டார் சேர்ந்த இடம் உறுதி அளித்துள்ளாராம். தற்போது நெல்சன் மற்றும் 5 ஸ்டார் செந்தில் இடையே சந்திப்பு நடைபெற்றதாம். அதில் நஷ்ட தொகையை சுமார் ஐந்து கோடியை திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் நெல்சன்.

கடைசியில் பிச்சைதான் எடுக்கணும் போல! Bloody Beggar படத்தின் முதல் நாள் வசூல்... | Tamil Cinema News

இதனால் விநியோகஸ்தர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளார்களாம். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை இயக்கிய அவருடைய பாணியிலேயே நஷ்டத்தை ஈடு கட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் சினிமா வட்டாரங்கள். நெல்சன் இந்த படத்தை தயாரித்த வகையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறாராம் .ஏனென்றால் இந்த படத்தின் இதர உரிமைகள் விற்பனையில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது,