டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், அணை திறக்கப்பட வேண்டிய தேதியன்று வந்து, நீர்வரத்து குறைவாக உள்ளதால் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்பு வழங்குகிறோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதன் நிர்வாக அலட்சியத்தைக் காட்டுகிறது. அணையின் நீர்வரத்து குறைவாக இருக்கும் விஷயம் தமிழக அரசுக்கு நேற்று தான் தெரியவந்ததா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டுப் பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. இத்தகையச் சூழலில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்களைக் காப்பாற்ற 18 மணிநேரத் தடையில்லா மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது எந்த அளவிற்குச் சாத்தியம் மற்றும் உண்மையானது என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக ஒரு முறையான ஆய்வுக் குழுவை அமைத்து, இப்பிரச்சினையைப் போர்க்கால அடிப்படையில் அணுக வேண்டும். முதலமைச்சரின் நிர்வாக அலட்சியத்தால் டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…