தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் சமீபத்தில் நடைபெற்ற கரூர் விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதனை விஜய் சட்ட ரீதியாக கையாண்டு வரும் நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமீபத்தில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சென்னை மாமல்லபுரத்தில் நேற்று விஜய் சந்தித்து பேசி இருந்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் கரூருக்கு நேரடியாக செல்லாமல் எந்தவிதமான அபாயமும் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து விஜய் இந்த சந்திப்பை நடத்தினார். இருந்தாலும் கரூர் மக்களை நேரடியாக சந்திக்காததை பல தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
கரூரில் பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்தில் அழைத்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஏற்கனவே பாஜக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் விஜயின் அடுத்த அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமையும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…