கனடாவின் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துகளால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, உடனடியாக உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள், அருவருப்பான இந்தியரே என்று கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இன்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது.
இதனிடையே இங்கிலாந்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தப் பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று அவர்கள் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…