“தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் பீகார் மாநில தேர்தல் பற்றிய பலரும் ஏளனமாக பேசினார்கள். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடையும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கு இப்போது என்ன நடந்தது? 202 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எதிர்த்து TVK ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் அப்படி என்றால் இறந்தவர்களின் ஓட்டுகளை வாங்க விஜய் விரும்புகிறாரா? என்ன பேசுகிறார் அவர்? கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறாரா? எந்த காரணத்திற்காக அவர் ஆதரவாக இருக்கிறார் ? கரூரில் உங்கள்(விஜய்) மீது செருப்பை கழட்டி வீசிய கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்களா? உங்கள் கூட்டத்தில் 41 பேர் இறந்தார்கள் அவர்களின் பிணங்களின் மீது நடந்து வந்த ஸ்டாலினுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என்று பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…