நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தற்போது தயாராகி விட்டார். நடிகை சமந்தாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுக்கு ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் வேண்டாம் என சமந்தா மறுத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவுடன் நெருக்கமாக இருந்து வந்த இவர் தற்போது அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் நாக சைதன்யாவுக்கும் சோவிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திருமண தேதி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நாகச் சைதன்யா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை சோபிதா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…