#image_title
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக வலம் வருபவர் ரியாஸ்கான். ரியாஸ் கான் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பத்ரி, வின்னர், கஜினி, ஆதவன், மாஞ்சா வேலு, மம்பட்டியான் உள்ளிட்ட திரைப்படங்களில் ரியாஸ் கான் நடித்துள்ளார்.
இவரது மனைவி உமா ரியாஸ்கான். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். உமா ரியாஸ் கான் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் தம்பதியினருக்கு ஷாரிக் ஹாசன், சமர்த் ஹாசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷாரிக் ஹாசன் பங்கேற்று நடனமாடி அசத்தினார். மேலும் ஜிவி பிரகாஷின் பென்சில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு சில சிறிய கதாபாத்திரத்திலும் ஷாரிக் ஹாசன் நடித்து வருகிறார். இவர் மரியா ஜெனிபர் என்பவரை காதலித்தார். இரு வீட்டார் சம்பந்தத்துடன் நேற்று அடையாறில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
முன்னதாக மெஹந்தி பங்க்ஷன், ஹெல்தி பங்க்ஷன் என அனைத்து கொண்டாட்டங்களும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. திருமணத்தில் திரை பிரபலங்கள் ஏராளமானார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் புது மண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…