சமந்தாவை நேர்ல பார்த்தா என்ன செய்வீங்க?.. நாகசைதன்யா சொன்ன கூலானா பதில்.. என்ன தெரியுமா?

By Mahalakshmi on சித்திரை 22, 2024

Spread the love

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் ஒரே படத்தில் ஒன்றாக நடித்து காதல் மலரந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமண வாழ்க்கை பலருக்கும் கடைசிவரை நீடிப்பது இல்லை. திருமணம் ஆகி சில வருடங்களில் காதல் கசந்து விட விவாகரத்து என்று முடிவெடுத்து விடுகிறார்கள்.அப்படி ஒரு ஜோடி தான் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

   

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, கன்னடம்,உள்ளிட்ட மொழிகளில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கே வருடங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து போவதாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள்.

   

 

அதைத்தொடர்ந்து தற்போது இருவரும் அவரவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார் நாக சைதன்யா. அதில் நாக சைதன்யாவிடம் சமந்தாவை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு ஒரு ஹாய் சொல்வேன், அவருக்கு ஒரு ஹக் கொடுப்பேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.