தமிழ் சினிமாவில் கவர்ச்சி இல்லாமல், தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையானவர், தேவயாணி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை தேவயாணி, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் இணைந்து YouTube சேனலுக்கு பேட்டியளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகையான தேவயாணி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பில் உருவான பல படங்கள் வெற்றி படமாக சினிமாத்துறையில் இடம் பெற்றது. இந்த வரிசையில் ‘காதல் கோட்டை’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘நீ வருவாய் என’, ‘தெனாளி’, ‘நண்பர்கள்’, ‘ஆனந்தம்’, ‘அழகி’ போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளது.
30 வருடங்களாக சினிமா துறையில் வலம் வந்த நடிகை தேவயாணி சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தார். 7 வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை வென்ற “கோலங்கள்” சீரியலில் அபிநயா கதாபாத்திரத்தில் தேவயாணி நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் சிறந்த நடிகைக்கான “தமிழ்நாடு மாநில விருதை” தேவயானி வென்றார். நடிகை தேவயானிக்கு 2000 ம் ஆண்டு “கலைமாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நடிகை தேவயாணி நடிப்பில் வெளியான “அழகி” திரைப்படத்திற்காக விருதையும் வென்றார். தமிழ் சீரியல்களில் ஒரு எபிசோடு நடிப்பதற்கு ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் முதல் சீரியல் கலைஞர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை தேவயாணி ஜீனி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது நடிகை தேவயாணி, இயக்குனர் ராஜ்குமார் மற்றும் இரு மகள்களுடன் இணைந்து YouTube சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தன் வாழ்வில் நடந்த சினிமாதுறை நிகழ்வுகளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…