கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய புகழ் பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் கட்டுரைகள் என பல எழுதியவர். இவரது இயற்பெயர் முத்தையா. தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகுடல்பட்டி என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர்.
பாடலாசிரியராக மட்டுமல்லாமல் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். தனது படைப்பிற்காக சாகித்ய அகடமி விருதை வென்றவர் கண்ணதாசன்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் பல வாழ்க்கை தத்துவ பாடல்களை எழுதியதன் மூலம் பிரபலமானவர். வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை அசால்டாக தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியவர் கண்ணதாசன். எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு ஹிட் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். இந்நிலையில் கண்ணதாசன் முதலில் பாடலாசிரியராக வரவேண்டும் என்று சினிமாவிற்குள் வரவில்லையாம். அவருக்கு வேறொரு ஆசை இருந்திருக்கிறது. இதைப்பற்றி அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியிருக்கிறார்.
அண்ணாதுரை கண்ணதாசன் கூறுகையில், “எனது அப்பா சினிமாவிற்குள் நடிகனாக வேண்டும் என்ற விருப்பத்தோடு தான் வந்தார். அதற்காக தனது பெயரை சந்திரமோகன் என்று மாற்றிக்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. பாடல் எழுதுவதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அவர் மனமார ஏற்றுக்கொண்டு பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அதோடு நிறுத்தவில்லை திராவிட கட்சிகளுக்காகவும் காங்கிரஸ் கட்சிக்காகவும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் என் தந்தை கண்ணதாசன்” என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன்.
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…