டிரம்முக்குள் சிதைக்கப்பட்டு கிடந்த உடல்… மாயமான மனைவி, 3 குழந்தைகள்… வீட்டு ஓனர் மகனும் தலைமறைவு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!

By Srimathi on ஆவணி 18, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹான்ஸ்ராம், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளன. ஹான்ஸ்ராமின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்த பொழுது, வீட்டின் மேல் பகுதியில் உள்ள டிரம்முக்குள், ஹான்ஸ்ராமின் உடல் சிறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவரின் கழுத்துப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டு, உடல் சிதையாமல் இருக்க டிரம் முழுவதும் உப்பு போடப்பட்டிருந்தது. ஹான்ஸ்ராமின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஹான்ஸ்ராமின் மனைவி, குழந்தைகள் காணாமல் போன நிலையில், வீட்டு உரிமையாளரின் மகனும் காணாமல் போனது, போலீசாருக்கு அவர்கள் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. மாயமானவர்களை கண்டுபிடித்தாலே, இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியும், என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

   

 

   


,