#image_title
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. முதலில் பாரதிராஜா சிவாஜி கணேசனிடம் படம் பற்றி கூறும்போது அண்ணா இந்த படத்துல உங்களுக்கு மேக்கப் எதுவும் கிடையாது.
லொகேஷன் சொல்லுவோம் நீங்க அங்க வந்து நான் சொல்ற மாதிரி உட்கார்ந்து எழுந்து நடந்தா போதும் அப்படின்னு சொல்லி இருக்காரு. இரண்டு மூன்று நாள் ஷூட்டிங்கில் சிவாஜி பாரதிராஜா சொன்னபடியே நடந்து கொண்டார். பின்னர் அவரிடம் சென்று நீங்க என்ன படம் எடுக்குறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல அப்படின்னு சொல்லி இருக்காரு. உடனே பாரதிராஜா அண்ணே இப்ப நான் படமாக்கி கொள்கிறேன்.
அந்த படத்தை உங்களிடம் போட்டு காண்பிக்கிறேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று சொல்லி இருக்காரு. பாரதிராஜா நினைத்தபடியே சிவாஜிகணேசன் முதல் மரியாதை படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டார். சிவாஜி கணேசன் படம் எப்படி வருமோ என அச்சத்தில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜாவும் இந்த படம் ஓடாது என கூறியுள்ளார்.
ஷூட்டிங் முடிந்த பிறகு ஒருநாள் பாரதிராஜா சிவாஜி கணேசனுக்கு படத்தை போட்டு காண்பித்துள்ளார். படம் முடிந்த பிறகும் சிவாஜிகணேசன் அவரது இருக்கையில் இருந்து எழுந்திருக்கவே இல்லையாம். அப்படியே படத்தை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த படம் சூப்பராக வரும் என சிவாஜி கணேசன் கூறியுள்ளார். பாரதிராஜாவும் சிவாஜிகணேசனும் நினைத்தபடி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…