#image_title
நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. சிறுத்தை சிவா என தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் இவர் வீரம், வேதாளம், அண்ணாத்த உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்தவர். இப்போது சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சிறுத்தை சிவாவின் சொந்த தம்பி பாலா. இவர் அன்பு என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். வீரம் படத்தில், அஜீத்குமாரின் 4 தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். தமிழை காட்டிலும் மலையாளத்தில் நிறைய படங்களில் பாலா நடித்திருக்கிறார்.
நடிகர் பாலா, கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், 2015ம் ஆண்டு முதல் மானசீகமாக பிரிந்துவாழ்ந்த அவர், 2019ம் ஆண்டில் முறைப்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். மைனர் பெண் என்பதால், அவந்திகா, அமிர்தா சுரேஷ் வளர்ப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி, தனது பிறந்த நாளன்று நடிகர் பாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது மனைவியை விவகாரத்து செய்தது குறித்து பேசிய போது, என் மகள் அவந்திகாவின் எதிர்காலம் கருதி சில விஷயங்களை நான் பேசுவதை தவிர்க்க நினைக்கிறேன். அந்த காட்சியில் அந்த மூன்று பேரை நான் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அவர்களை நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். ஆனால், என் மகள், மகனாக பிறக்காமல் போய்விட்டாள்.
அவந்திகா மட்டும் மகனா பிறந்திருந்தால் அந்த மூன்று பேரையும் நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். என் வாழ்க்கை இப்படியாக, என் மனைவியை விட்டு நான் பிரிய அந்த கோபி சுந்தர்தான் காரணம், என்று பாலா கூறியிருக்கிறார். தமிழ் சினிமா ஹீரோ ஒருவரை, சில மாதங்களுக்கு முன் இதே போல் ஒரு பிரபல இசையமைப்பாளர் குறிப்பிட்டு, அவர் செய்த துரோகத்தை என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வெளியே சொல்லவில்லை என்று சொன்னது போன்றே இந்த சம்பவமும், நடிகர் பாலா வாழ்வில் நடந்துள்ளது.
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…