நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற இளைஞர்.. விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல்.. விசாரணையில் வெளிவந்த பலத்திடுக்கிடும் தகவல்..!!

Spread the love

திருநெல்வேலி டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் (19). வாட்டர் கேன் போடும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்கள் 4 பேருடன் டீ குடிப்பதற்காக நெல்லை ரயில் நிலையம் அருகில் இருந்த டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். டீ குடித்துக் கொண்டிருக்கும் போது சில மர்ம நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அவர்கள் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து வெங்கடேஷ் மற்றும் நண்பர்களையும் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். வெங்கடேஷுக்கு சரமாரியாக அரிவாள்வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அதிர்ந்து போன நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வெங்கடேசனின் நண்பர்களிடம் விசாரித்த போது தான் தெரியவந்தது பல திடுக்கிடும் தகவல்கள். கடந்த 2023 ஆம் ஆண்டில் சக்தி என்ற நபரை அருவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று உள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த கொலைக்கு காரணம் என்ன? சக்திவேல் கொலைக்கு பழி வாங்குவதற்காக வா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் டீ குடிக்கப் போன இளைஞரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

6 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

7 மணத்தியாலங்கள் ago