Categories: சினிமா

“நான் ஹீரோ ஆனதுக்கு முக்கியக் காரணமே முரளிதான்… இது அவருக்கே தெரியாது”- ராமராஜன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். 1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். ஆனால் 90 களுக்குப் பிறகு ராமராஜனின் மார்க்கெட் சரிய ஆரம்பித்துள்ளது.

ராமராஜனின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததே ஒரு இன்ப விபத்துதான். ராமராஜன்(அப்போது குமரேசன்) மதுரை மேலூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் வேலை செய்து வந்தார். அந்த தியேட்டர் ஓனர் மூலமாக சென்னை வந்து இராமநாராயணன் ஆபிஸ்ல ஆபிஸ் பாயா வேலை பார்தவர் அவரிடமே உதவி இயக்குனர் ஆனார்.

அப்படி 40 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் இதுவரை 11 படங்களை இயக்கியும் உள்ளார். இது பலரும் அறியாத தகவல். 1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.

அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. தான் இயக்கும் படங்கள் 100 நாட்கள் ஓடவில்லையே என்ற ஏக்கமும், தான் சினிமாவுக்கு நடிக்கதானே வந்தோம் என்ற பழைய ஆசையும் சேர்ந்து அவரை ஹீரோவாக நடிக்க ஒத்துக் கொள்ளவைத்துள்ளது.

ஆனால் இந்த படத்தில் அவர் நடிகராவதற்கு முக்கியக் காரணமே, நடிகர் முரளிதானாம். ஏனென்றால் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் முதலில் உண்மைகள் உறங்குகின்றன என்ற பெயரில் உருவாக இருந்துள்ளது. அதில் முரளியும், ரேவதியும் நடிக்க இருந்தார்களாம். ஆனால் அப்போது முரளியிடம் கால்ஷீட் இல்லாததால்தான் ராமராஜனை ஹீரோவாக்கலாம் என தயாரிப்பாளரும் இயக்குனரும் முடிவு செய்துள்ளனர். அப்படிதான் ராமராஜனின் திரை வாழ்வு திருப்புமுனைக்கு முரளி தானறியாமலேயே ஒரு காரணமாக இருந்துள்ளார்.

vinoth

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

1 மணத்தியாலம் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

1 மணத்தியாலம் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

1 மணத்தியாலம் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

1 மணத்தியாலம் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago